அப்பாவிற்கு ...
உயிர் தந்த நீங்கள், உங்கள் பிரிவைத் தாங்க மனம் தரவில்லை
அறிவு தந்த நீங்கள், அழுகையை மறைக்கச் சொல்லித் தரவில்லை
உழைப்பும் முயற்சியும் என்றும் கைவிடாது
வாழ்க்கை என்பது பல்சுவை கொண்டது
தைரியம் காக்கும் கவசம் போன்றது
எல்லாம் சொல்லித் தரவில்லை வாழ்ந்து காட்டினீர்கள்
இருந்தும் மறைவு என்னும் பெரும் வலியைக் கையாளச் சொல்லித் தரவில்லை
காலம் வலியது எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்
என் மனதில் பொக்கிஷமாய் இருக்கும் உங்கள் நினைவுகளை அல்ல
வலியை மறக்க முடியாது, ஆனால் வலியுடன் வாழப் பழகிக் கொள்வேன்
உங்கள் அன்பு மகள்
அம்மு