Prayer for Healing: திருமுறை மருந்து - வழக்குகளில் வெல்லவும், சகோதர / சகோதரிகள் வளமுடன் வாழவும் ஓத வேண்டிய பதிகம்.

Sounds of Aanilai

28-12-2022 • 5 mins

வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1 இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2 செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3 நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4 காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5 பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6 மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7 அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8 அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9 பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10 காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 11 சுவாமி : வீழியழகர்; அம்பாள் : அழகுமுலையம்மை.