இந்த நிலையில், சில்பா அவருடைய பெற்றோருடன் சென்று சேத்துவண்டை ஊர் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளனர். அபோதுதான் ஏற்கனவே சுரேஷ் கிருஷ்ணா என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அந்த பெண்ணையும் வரதட்சணை கேட்டு அடித்து துரத்தியதாகவும் ஊர் மக்கள் மூலம் தெரியவந்தது.
ஊர்மக்களின் பேச்சுவார்த்தைக்கு பின்பு, சில்பாவோடு சுரேஷ் கிருஷ்ணா சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், 2 வாரங்கள் மட்டுமே அன்பாக நடப்பதுபோல் நடித்து மீண்டும் வரதட்சணை கேட்டு சில்பாவை அடித்து துரத்தியுள்ளார்கள்.
மேலும் சுரேஷ் கிருஷ்ணா மூன்றாவது திருமணம் செய்துகொள்வதற்கு வேறோரு பெண்ணிடம் செல்போனில் பேசி வருவது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சில்பா கணவர் சுரேஷ் கிருஷ்ணா மீதும் அவருடைய குடும்பதார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், மூன்றாவதாக பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற கோரியும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணனிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் அந்த பெண் அங்கிருந்து சென்றார்.